மஜக தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..! மாநில துணை செயலாளர் A R சாகுல் ஹமீது பங்கேற்பு.!


தென்காசி.டிச.12.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் பங்கேற்று, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் கூட்டத்தில் விவசாய அணி சார்பாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் , தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு,குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், எனவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத, பேதமின்றி விடுதலை வேண்டும். என மூன்று அம்ச‌ கோரிக்கைகளை வற்புறுத்தி வருகிற 26.12‌.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் Mss. முகமது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளரகள் வாவை A.இனையத்துல்லாஹ், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிலம்பாட்டம் சாகுல் ஹமீது, மாணவர் இந்திய மாவட்ட செயலாளர் முகமது அன்சாரி, விவசாய அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அபூபக்கர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்திகேயன், பாதுஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
011-12-2020