வேலூர் மாநகரம் சார்பில் குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி…

image

ஜன.26., வேலூர் கிழக்கு மாவட்டம் 31வது கிளையின் சார்பாக இன்று 68ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி BTC ரோட்டில் அமைந்துள்ள மஜக கொடிக்கம்பத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு மழலைச்செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக ஜாமியா பாகியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் ஓல்டு டவுன் கிளை முதல்வர் மௌலவி.F.M.ஜாபர் அப்துல்லாஹ் லத்தீபி அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றினார். மாநகர செயலாளர் சகோ.O.S.T. அஸ்கர் அவரகள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சகோ.S.முஹம்மத் ஜாபர் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநகர பொருளாளர் சைதை.ரபீக் மற்றும் 3ம் மண்டல து.செயளாளர் செந்தமிழன் ஷேக் இம்ரான் ஆகியோர் குடியரசு தின வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட, மாநகர, மண்டல, கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

*பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் இந்திய நாடு.*

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (MJK IT-WING)
வேலூர் கிழக்கு மாவட்டம்.
(26.01.2017)