வேலூர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்.! மாநில துணைச்செயலாளர் அப்சர் சையத் பங்கேற்பு.!


நவ.14.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா நகரத்தில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் உற்சாகமாக நடைபெற்றது.

பள்ளிகொண்டா நகர செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் S.G.அப்சர்சையத் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸின் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில் மற்றும் பள்ளிகொண்ட நகர பொருளாளர் GS.சத்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜகவில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜகவினர் முன்னெடுத்துள்ளனர்.

இம்முகாமில், நகர துணை செயலாளர்கள் நஸ்ரு, நியாமத்துல்லா, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்.
14.11.2020