மஜக திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்.!தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!


திருச்சி.அக்.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று (26.10.2020) மாலை மாவட்டச்செயலாளர் பாபு பாய் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா நாசர், இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய் ரஷாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது, மேலும் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர, கிளை செயலாளர்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
26.10.2020