வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

காட்டுமன்னார்குடி அருகே குருங்குடி எனுமிடத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனையடைந்தோம். அவர்களுக்கு எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு தற்போது உயிரிழந்தோருக்கு தலா 2 லட்சம் அறிவித்திருக்கும் நிலையில், அதை உயர்த்தி கொடுத்திட ஆவணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04.09.2020