தூத்துக்குடி மஜக சார்பில் மூன்றாம் கட்ட நிவாரணம் வழங்கல்

மே.21,
மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மூன்றாம் கட்டமாக இன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட குருகாட்டூர், கோட்டூர், இராஜங்காபுரம், முத்துராமலிங்கபுரம், கல்லாம்பாறை ஆகிய ஊர்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் கேம்பலாபாத்தை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்களின் பங்களிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மஜக வின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் குருகை R.ராசுகுட்டி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்ட விவசாய அணி செயலாளர் R.ஜெயசீலன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ஆசிர் ராஜ்குமார் மற்றும் மஜகவினர் உடனிருந்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம்.
21.05.2020