ராஜபாளையத்தில்டாஸ் மாக்கடைகளை மூடக்கோரி வட்டாட்சியரிடம் மஜக மனு!

ராஜபாளையம்:மே.07

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 41நாட்கள் கழித்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் பெரிதும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

நோய் தொற்று சமூக பரவலாக மாற இதுவே காரணமாகிவிடும் எனவே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் வட்டாட்சியரிடம் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இதில் ராஜபாளையம் நகர செயலாளர் ரஹ்மத்துல்லா, நகர பொருளாளர் காசிம், நகர துணை செயலாளர் பஷீர் அப்துல் வஹாப், ஒன்றிய செயலாளர் தமிமுன்அன்சாரி, கிளை கிளை செயலாளர் அப்பாஸ், மாணவர் இந்தியா மணிகண்டன், மற்றும் இப்ராஹிம், நிசார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ராஜபாளையம்
#விருதுநகர்_மாவட்டம்
07.05.2020