மஜக துறைமுகம் பகுதி சார்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

சென்னை.ஏப்ரல்.04.,

ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டம், பகுதி, கிளைகள் சார்பாக பல்வேறு கட்டங்களாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி சார்பாக வருமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் விதமாக 15 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தனர்.

அடுத்த கட்டமாக துறைமுகம் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு உதவும் விதமாக இப்பணியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைமாவட்டம்
04-04-2020