அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்.! சட்டப்பேரவை வளாகத்தில் முதமிமுன்அன்சாரி MLA பேட்டி.!

சென்னை.மார்ச்.16.,

இன்று சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை மேற்கோள்காட்டி வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேசினார்.

இது குறித்து பேரவையின் வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள்,

அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தில் இது குறித்து தொடர்ந்து அமித்ஷா அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். அவரது கருத்தை அமைச்சர் மேற்கோள் காட்டுகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 14 மாநில முதல்வர்கள் சட்டசபையை கூட்டி, தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்கள். இவர்கள் ஏன் இதை செய்யத் தயங்குகிறார்கள்? என தெரியவில்லை.

எனவே இதுகுறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
16-03-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.