திருச்சியில் நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றக் கலந்தாலோசனைக் கூட்டத்தில், ஜெய்னுலாபிதீன் பங்கேற்பு!

மார்ச் 15,

திருச்சி சுப்ரமணியபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் பேசிய நீதியரசர் ஹரிபரந்தாமன் (ஓய்வு) சட்ட நுணுக்கங்கள் குறித்தும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் வகுப்பெடுத்தார்.

இதில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம். ஜெய்னுலாபிதீன் தலைமையில் மஜகவினர் கலந்து கொண்டார்.

மேலும், தமிழகமெங்கும் நடைபெறும் தொடர் ஷாகின்பாக் போராட்டத்தின் பிரதிநிதிகளும், அனைத்து சமூக நல இயக்க கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து கலந்தாலோசனை செய்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.
14.03.2020