மழையைப் பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம்! டெல்லி ஷாஹின் பாக்கை நினைவூட்டும் தென்காசி தொடர் போராட்டக்களத்தில்! மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை!


மார்ச்.10,
தென்காசியில் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணா போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

களத்தில் கொட்டும் மழையை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாது பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் குடைகளை பிடித்தவாறு திரண்டிருந்தனர். இது கடும் குளிரிலும் போராடும் டெல்லி ஷாஹின்பாக் போராட்ட களத்தை நினைவுப்படுத்தியது.

இதில் மஜக சார்பில் மாவட்ட செயலாளர் M. பீர்மைதின், பொருளாளர் முகமது இப்ராஹிம், பேச்சாளர் வாவை இனையத்துல்லா, ஒன்றிய செயலாளர் அன்வர், துணைச் செயலாளர் சபிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சங்கை பீர்மைதின், சங்கரன்கோவில் நகர செயலாளர் சுல்தான், நகர பொருளாளர் இத்ரீஸ், அச்சன்புதூர் நகர செயலாளர் முஹம்மது நாசர், பொருளாளர் கமாலுதீன், சங்கரன்கோவில், வடகரை, புளியங்குடி கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்காசி_மாவட்டம்.
09/03/2020