தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனைக்கூட்டம் மஜக பங்கேற்பு!!

பிப்.24.,

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக வருகின்ற 26 அன்று குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடக்க உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்,பாண்டிச்சேரி முதல்வர் கிருஷ்ணசாமி,திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு தமிழக தலைவர்கள் பங்குபெறும் இந்த மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.

பேராசிரியர் அருணன், கோபண்ணா, தாவூத் மியாகான், உதயகுமார்,பஷீர் ஹாஜியார், சிக்கந்தர், இப்னு சவூத், கரீம் உள்ளிட்ட தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் அங்கம் வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார், இந்த கூட்டத்தில் மாநாட்டு பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் ஷமீம் அஹமது, மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை