மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆவடியில் மாபெரும் பொதுக்கூட்டம்..! எஸ்எஸ்ஹாரூன் ரசீது கண்டன உரை..!!

சென்னை.,ஜன.29

மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஆவடி நகரம் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஆவடியில் 28.01.2020 அன்று நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்… தற்போது நடைபெறும் போராட்டங்களை உலமாக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். முதலாம் சுதந்திர போராட்டத்தில் உலமாக்களின் பங்களிப்பால் எப்படி போராட்டம் வீரியம் அடைந்ததோ, அதேபோல் தற்போது இரண்டாம் சுதந்திர போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இன்று மக்கள் விரோத மத்திய அரசு இது போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என்று சூளுரைத்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அக்பர் உசேன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் சாகுல் ஹமீது, திருவள்ளூர் மேற்கு மாவட்டப்பொருளாளர் பக்ரூதீன், மாவட்ட துணைச் செயலாளர் பஷீர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் இலியாஸ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கலிமுல்லா ஆவடி நகரச் செயலாளர் ஷாஹுல், மீரான் உள்ளிட்ட நகர, கிளை மஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சினர், அமைப்பினர், மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_மாவட்டம்.
28/01/2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.