குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலமிட்டு போராடிய மஜகவினர்!


#போராட்டத்தில்இந்துசகோதரசகோதரிகள்பங்கேற்பு!!

மேட்டுப்பாளையம் டிச.31.,பாரபட்ச முறையில் மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோத குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய அளவில் ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்,

அதை தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 15திற்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில் #NO_CAA #NO_NRC என கோலமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதில் அப்பகுதிகளில் உள்ள இந்து சகோதரிகளும், தாய்மார்களும், இணைந்து கோலமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இது போன்று எழுதக்கூடாது என தெரிவித்தனர் பிறகு மஜக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் பேசி கோலப்போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த போராட்டத்தில்
மாவட்ட பொருளாளர் EMS. ரபிதீன், மற்றும் நிர்வாகிகள் ஆரிப், அப்பாஸ், கோகுல், நவ்ஃபல், காசிம், பாசித், ரகுமான், நந்தகுமார், காஜா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைவடக்குமாவட்டம்
31.12.19