பண்ருட்டியில் இரயில்நிலையத்தை முற்றுகையிட திரண்ட மஜகவினர் தடுத்து நிறுத்தி கைது!

டிச.15,

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் மஜக சார்பில் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொடர்ச்சியாக இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு சார்பாக பண்ருட்டியில் இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்டச் செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைப்பெற்றது.

மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் ஆகியோர் கண்டன முழக்கமிட்டு போராட்டத்தை துவக்கி வைத்தனர்.

பேருந்து நிலையத்திலிருந்து இரயில் நிலையத்தை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாரு முன்னேறிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில், மாவட்ட பொருளாளர் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் கான், பண்ருட்டி யாசின், Apm சலீம், ரியாஸ் ரஹ்மான், கியாசுதீன் (தெ) உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஒன்றிய, நகர கிளைகளை சேர்ந்த மஜகவினர் திரளாக கலந்து கொண்டு கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.