தேசியக்கொடி ஏந்தி புதிய குடியுரிமைசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜகவினர் ஆர்ப்பாட்டம்!

டிச.15,
பெரம்பலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் M.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் லெப்பைக் குடிகாடு பேருந்து நிலையம் அருகில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜகவினர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், சட்டத்திற்கெதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர்கள் கைகளில் ஏந்தி நின்றது அப்பகுதியை கடந்து சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.

மஜக மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி S.இப்ராஹிம்ஷா, திருச்சி பேரா.மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக கண்டன உரையாற்றிட மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் N.ஜஹாங்கிர் பாஷா, H.தமிமுன்அன்சாரி, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் C.M முகமது இஸ்மாயில், ஹக்கீம் பாஷா, A.உமர் பாரூக், M.முஹம்மது பாரூக், M.ஜாஹிர் உசேன், S.நிஹாஸ், திருமாந்துறை அன்பரசன், P.Mசம்சுதீன், ஷாஜகான், பெரம்பலூர் அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் திரளாக பங்கேற்று கைதாகினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாவட்ட செய்தி தொடர்பாளர் P.M சாகுல் ஹமீது வரவேற்றார்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#பெரம்பலூர்_மாவட்டம்.