கேரளா மாநிலத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய மஜக..! கண்ணீருடன் நன்றி தெரிவித்த கேரள மக்கள்..!!

கோவை.செப்.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 15லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டன.

அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பொருட்களை நேரடியாக வழங்க மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் 40க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண குழுவினர் புறப்பட்டு சென்றனர்.

அவர்களுக்கு கேரள மாநிலம் வய்யநாடு பகுதியில் உள்ள மானந்தாவடி கிறிஸ்த்துவ தேவாலயத்தில் தங்க இடமளித்தனர்.

பிறகு அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து கவுன்சிலர் ஜேக்கோசெபாஸ்டின், மற்றும் சமூக ஆர்வலர் ரபீக், அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு இரு குழுக்களாக மஜக வினர் செயல்பட்டனர்.

பிறகு வய்யநாடு மானந்தாவடி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்கள் இல்லத்திற்கு மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, அவர்கள் தலைமையில் நிவாரண குழுவினர் சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்.

பொருட்களை பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் நாங்கள் இருக்கும் பகுதி பலருக்கு வர சிரமமாக இருப்பதாக கருதி யாரும் வரவில்லை ஆனால் எங்களை தேடி நீங்களே வந்துள்ளீர்கள் என கூறி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மதுரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், தொழிற்சங்க மாவட்ட தலைவர் அக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அக்கீம், பகுதி நிர்வாகிகள் காதர், அபு, ஹாருண்ரஷீது, செமீர், இக்பால், கிளை நிர்வாகிகள் இப்ராஹிம், ஜாகிர், நெளபல், காதர், மற்றும் ஆயில் அக்கீம், அக்பர்.உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#கோவை_மாவட்டம்.
04.09.18