You are here

ஈரோடு மேற்கு மாவட்ட மஜக சார்பில் கேரளாவில் நேரடியாக வெள்ள நிவாரண உதவிகள்..! மாநில துணை செயலாளர் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார்..!!

ஈரோடு.செப்.01.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஈரோடு மேற்கு மாவட்டத்தின் சார்பாக 3லட்சம் மதிப்பிலான கேரள வெள்ள நிவாரண பொருட்களுடன் திருச்சூர் ஜில்லா சாலூர் கிராம பஞ்சாயத்து பகுதியில் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியும் வெள்ள நிவாரண பொருட்கள் மாநில துணை செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் அப்பகுதி பஞ்சாயத்து கவுன்சிலர் இப்ராஹிம், துணை தலைவர் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் முன்னிலையில் மஜகவினருக்கு நன்றி தெரிவித்து கெளவுரவித்தனர்.

அவர்களின் மொழி தெரியாவிட்டாலும் அவர்கள் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தது மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது.

இதில் 200 க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்.

31.08.2018

Top