கேரளா மக்களுக்காக மஜக சார்பில் கோவையில் நிவாரண நிதி சேகரிப்பு..!

கோவை.ஆக.21., மனித நேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதி செல்வபுரம் 77வது வார்டு கிளை சார்பாக கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் உறவுகளுக்காக கிளை செயலாளர் இப்ராஹிம், தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாக பிரச்சாரம்.

பேரூர், செட்டிபாளையம், தெலுங்குபாளையம், LIC காலனி, செல்வபுரம், ஆண்டிப்பாளையம், பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் கேரள மக்களுக்காக உணவு உடமைகள் பொருளாதாரம் தந்து உதவினர்.

இந்நிகழ்வில் இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அக்கீம், மத்திய பகுதி செயலாளர் பூ.காஜா, கிளை பொருளாளர் அலி, துணை செயலாளர்கள் பீர்முகம்மது, அபு, நெளபல், மற்றும் கிளை நிர்வாகிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
21-08-18