திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கேரள மக்களுக்கு நிதி திரட்டும் பணி

திருவள்ளூர்.ஆக.20, கேரளாவில் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் இயற்கை பேரிடர்களில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மஜக சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று கடந்த செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று திருவொற்றியூர் பகுதியில் மாவட்ட செயலாளர் S.M.நாசர் தலைமையில் நிதி வசூல் செய்யப்பட்டது.

காலடிப்பேட்டை மார்க்கெட் மற்றும் திருவொற்றியூர் சுற்றுப்புற பகுதியில் நிதி வசூல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட் பொருளாளர் ஜாஃபர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் நிஜாம்,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கதிர் உசேன்,திருவொற்றியூர் பகுதி செயலாளர் ஆரிஃப்,பகுதி பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்