கேரளா மக்களுக்காக மஜக சார்பில் மதுரையில் நிவாரண நிதி சேகரிப்பு.!

மதுரை.ஆக.17., மதுரை வடக்கு மாவட்டம்
சார்பாக கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் உறவுகளுக்காக,

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக நேற்று ஜும்மா தொழுகையில் கேரள மக்களுக்காக ,
ஒத்தக்கடை.புதூர் டி.ஆர்.ஓ காலணி பகுதிகளில் உள்ள மூன்று பள்ளிவாசல்களில் கணிசமான தொகை நிவாரண நிதியாக திரட்டப்பட்டது.

பள்ளிவாசலில் அறிவிப்பு செய்து வசூல் செய்ய அனுமதி கொடுத்த ஜமாத் நிர்வாகிகளுக்கும் ஆர்வமாக நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்த பொதுமக்களுக்கும் இறைவன் கிருபை செய்வானாக.

இந்நிகழ்வில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட பொருளாளர் சுலைமான்,
மாவட்டதுணைச்செயலாளர் சசிக்குமார்,
மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் பிரித்திவிராஜ்,
புதூர் இப்ராகிம் பாஷா,
கிளை நிர்வாகிகள்
சக்கரை பீர்முகமது, தன்னார்வத்தோடு வணிகர் சங்க இஸ்மாயில், ஒத்தக்கடை சுல்தான் ஆகியோர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்
18-08-18