கேரளா பாலக்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மஜக நிர்வாகிகள் ஆய்வு..!

கோவை.ஆக.16., கடந்த சில நாட்களாக #கேரளா மாநிலம் தாழ்வான பகுதிகளில் ஏற்ப்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று கேரளா #பாலக்காடு பகுதியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி துணை பொதுசெயலாளர் சுல்தான் அமீர், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மீன் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஃபைசல் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.

களபணியில் உள்ள சலபி பள்ளி நிர்வாகிகளுடன் மக்களின் உடனடி நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

கடந்த 11.08.2018 அன்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கேரளா வெள்ள நிவாரண நிதி முதற்கட்டமாக 10இலட்சம் ரூபாய் அனுப்புவது என்ற அறிவிப்பை மஜக வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வெள்ள_நிவாரண_பணிக்குழு.