கலைஞர் இறுதி சடங்கில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்..!

சென்னை.ஆக.08., இந்தியாவின் முதுபெரும் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் இறுதி ஊர்வலம் சென்னை இராஜாஜி ஹாலிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் மழைக்கிடையே சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்து சேர்ந்தது, அங்கே அந்திசாயும் நேரத்தில் கலைஞரின் உடல் சந்தனப்பெட்டியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகெளடா, .கவர்னர் புரோஹித், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் , ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக மூத்த தலைவர் பேரா. அன்பழகன், தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA . விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இ.ந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு, அக்கட்சியை சேர்ந்த Ev KS இளங்கோவன், தங்கபாலு, குஷ்பு, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA ., கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட திரளான தலைவர்களும் பங்கேற்றனர்.

கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் திரு. அழகிரி., திரு.ஸ்டாலின், திருமதி ராஜாத்தி அம்மாள், திருமதி கனிமொழி MP ஆகியோரை சந்தித்து மஜக வின் சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#மஜக_தலைமையகம்_சென்னை.