எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவருடன் மஜக தலைவர்கள் கலந்துரையாடல்.

சென்னை.ஆக.09., சென்னையில் எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் ஃபைஜி தலைமையில் தேசிய துணைத் தலைவர் தெஹல்கான் பாகவி, தமிழக தலைவர் நெல்லை முபாரக் உட்பட அக்கட்சியின் தேசிய தலைவர்களுடன் மஜக தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, சீனி முஹம்மது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் ஆகியோர் பங்கேற்றனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்பாடுகளை வாழ்த்தி பல்வேறு ஆலோசனைகளை மஜக மாநில செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமுமுக பொது செயலாளர் ஹைதர் அலி, விசிக அப்துல் ரஹ்மான், தாவூத் மியாகான், INTJ முனீர், வெல்பர் பார்ட்டி சிக்கந்தர், பாத்திமா முசாப்பர், செமுமு முஹம்மது அலி, இமாம் தர்வேஷ் ரஷாதீ, அப்போலோ ஹனிபா,சி.எம்.என் சலீம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

நிறைவுரை ஆற்றிய SDPI தேசிய தலைவர் M.K. ஃபைஜி அவர்கள், இந்தியாவில் எங்கும் நடைபெறாத ஒரு நிகழ்வை தமிழகத்தில் காண்கிறேன்.அமைப்புகள் ஒரு இடத்தில் ஒருங்கிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், பல்வேறு தலைவர்கள் வழங்கிய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த எஸ்.டி.பி.ஐ முயற்சி செய்யும் என்றும் கூறினார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#மஜக_தலைமையகம்_சென்னை.