டிசம்பர்6 போராட்டம் ரத்து! மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு!

(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் அறிக்கை)

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் உடல்நிலை சுகவீனம் அடைந்திருப்பதையொட்டி தமிழகமெங்கும் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். எங்கும் அசாதரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

தற்போது ஏற்பட்டிருக்கும் தமிழக நிலையை கருத்தில் கொண்டும், காவல்துறையின் சட்ட ஒழுங்கு பராமரிப்பை கருத்தில் கொண்டும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட (நாளை) டிசம்பர்-6 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில்  31 இடங்களில் அறிவிக்கப்பட்ட இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை ரத்து செய்வது என தலைமை நிர்வாக்குழு முடிவு செய்திருக்கிறது.

பாபர் மசூதி நீதி தொடர்பான நமது உணர்வுகளை பிரார்த்தனையாக மாற்றி கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
05.12.16