கிறித்தவ மக்கள் அரசியலிலும் களமாட வேண்டும்…! சென்னையில் நடைபெற்ற விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…!!

சென்னை.ஜூலை.23., கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மேதகு டாக்டர் A.M.சின்னப்பா அவர்கள் ஆயராக பொறுப்பேற்று 25ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பாராட்டு விழா அதன் தலைவர் இனிகோ.இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆலந்தூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில் பங்கேற்று பேசிய #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், P.V.சின்னப்பா அவர்கள் தமிழை ரோமுக்கு எடுத்து சென்றவர் என்றும், விளிம்புநிலை மக்களின் முகம் என்றும் பாராட்டினார்.முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டார்கள். ஐரோப்பிய கிறித்தவர்கள் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டார்கள் .கிரித்தவ மக்கள் ; கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், இலவச மருத்துவமனைகள் என பல அரும்பணிகளை ஆற்றி வருகிறார்கள். இனி நேரடி அரசியலிலும் அவர்கள் ஈடுபட்டு களப்பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திரு பீட்டர் அல்போன்ஸ், திரு ரபி பெர்னாட், அப்போலோ அனிபா, நெல்லை முபாரக் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக நீதி ஆர்வலர்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் காஞ்சி வடக்கு(மா) செயலாளர் ஜிந்தா மதார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் A.யூசூப், MMH.முபாரக் மற்றும் காஞ்சி நிர்வாகிகள் ஆலந்தூர் சலீம், தாம்பரம் ஜாஹிர், பம்மல் சௌக்கத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்