நாகை தொகுதி MLA குறித்த பத்திரிக்கை செய்திகள் தொகுப்பு நூல் வெளியீடு..!

#நாகை_தொகுதி_MLA_குறித்த_பத்திரிக்கை_செய்திகள்_தொகுப்பு_நூல்_வெளியீடு..!

நாகை. ஜூலை.23., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் தொகுதி மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பொதுவாழ்வில் செயலாற்றிய சீர்மிகு பணிகள் குறித்து, கடந்த 20.05.2016 முதல் 30.06 2018 வரை இரண்டு ஆண்டுகள் வெளிவந்த பத்திரிக்கை செய்தி தாள்களின் தொகுப்பு நூலினை மஜக நாகை தெற்கு மாவட்ட செயலாளர் வடகரை M. பரகத் அலி அவர்கள் வெளியிட, அதனை பொதுச்செயலாளர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உடன் மஜக மாவட்ட பொருளாளர் திருப்பூண்டி சாகுல், மாவட்ட துணை செயலாளர் பொரவச்சேரி ஜாகீர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுல்தான், மாவட்ட மருத்துவ சேவை அணிச்செயலாளர் செய்யது முபாரக், மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மனித உரிமை அணி செயலாளர் தெத்தி ஆரிப், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தம்ஜூதீன் மற்றும் அலுவலக செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தொகுதி மக்களின் பார்வைக்காக இந்த தொகுப்பு நூல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை வடிவமைத்த அலுவலக செயலாளர் சம்பத்குமார் அவர்களை, சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பாராட்டினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 22.07.2018