மஜக அடியக்கமங்கலம் நகரத்தின் சார்பில் பெருநாளை முன்னிட்டு அரிசி பைகள் விநியோகம்..!

திருவாரூர்.ஜூன்.13., திருவாரூர் மாவட்டம் #அடியக்கமங்கலம் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் அடியற்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, மொத்தம் தலா ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ கொண்ட பைகள் என 305 கிலோ அரிசி #61_குடும்பங்களுக்கு நோன்பு #பெருநாளை_முன்னிட்டு நேற்று (12.06.2018) மாலை மஜக நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

#மஜக கிளை பொருளாளர் நூர் மெய்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் ஒன்றிய செயலாளர் அடியற்கை ஹாஜா மெய்தீன் அவர்களும், மஜக அமீரக துணைச்செயலாளர் அடியற்கை லியாகத்அலி அவர்களும் கலந்துகொண்டு அரிசி பைகளை வழங்கினர்.

இதில் மஜக கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் உடனிருந்தனர்.

இதனை அறிந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அடுத்த வருடம் இன்னும் அதிகமான குடும்பங்களுக்கு இன்னும் பல பொருட்கள் சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_அடியக்கமங்கலம்
#மஜக_திருவாரூர்_மாவட்டம்