UAEயில் நடைபெற்ற மதிமுக இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக பங்கேற்பு..!!

அஜ்மான்.ஜூன்.09., மதிமுகவின் அயல்நாட்டு பிரிவான அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் சார்பில் #மதநல்லிணக்க_இஃப்தார்_நிகழ்ச்சி 08/06/2018 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் பேரவை தலைவர் புளியரை.இசக்கி அவர்கள் தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் #மஜக-வின் #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை (MKP) சார்பில் அமீரக மண்டல செயலாளர். மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தமது வாழ்த்துரையில் மதிமுகவின் சார்பில் மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இஃப்தார் நிகழ்வை பாராட்டியதோடு, தமிழகத்தில் சமூக நல்லிணக்கதை முன்னிலைப்படுத்தி மஜக மேற்கொண்டு வரும் அனைத்து மக்களுக்குமான அரசியலை மேற்கோள்காட்டி பேசினார்.

மேலும் தமிழகத்தில் வேரூன்ற துடியாய் துடிக்கும் பாசிச சக்திகளை அடியோடு விரட்ட இதுபோன்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் #MKP சார்ஜா மாநகர செயலாளர் அடியற்கை.யூசுப்தீன் உள்ளிட்ட MKP நிர்வாகிகள் மற்றும் திமுக, விசிக, முஸ்லிம் லீக்,மே 17 இயக்கம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல் :
#MKP_தகவல் _தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#UAE_மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#ஐக்கிய_அரபு_அமீரகம்
08/06/2018