மாணவி பிரதீபா குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் கூறிய மஜக நிர்வாகிகள்..!

விழுப்புரம். ஜூன்.06., மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார்.

10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

இன்று பிரதீபாவின் குடும்பத்தை நேரில் சென்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறினார்.

இதில் மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹீம் மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விழுப்புரம்_மாவட்டம்
06.06.2018