சென்னையில் நம்புதாளை ஜமாத் நடத்திய இஃப்தார்..! மஜக_பொதுச்செயலாளர்_பங்கேற்பு…!!

சென்னை. மே.29., ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த மக்கள் வணிக நிமித்தமாக சென்னையில் குடியேறி, பல தொழில்களில் ஈடுபட்டு வலம் வருகின்றனர்.

அவர்கள் நம்புதாளை முஸ்லிம் நல சங்கம் என்ற பெயரில் 16. ஆண்டுகளாக செயல்பட்டு, பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களும், மாநிலச் செயலாளர் #A_சாதிக்_பாட்ஷா அவர்களும் பங்கேற்றனர்.

500 குடும்பங்களை சேர்ந்த 1300 பேர் பங்கேற்ற இந்நிகழ்வு, எழும்பூர் இம்பீரியல் – சிராஜ் மஹாலில் நடைபெற்றது.

+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மாநில செயலாளர் சாதிக் பாஷா அவர்களும் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் #J_ஷமீம், #மாணவர்_இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பிஸ்மி மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_மாவட்டம்.
28.05.2018