தூத்துக்குடி போராட்டக்காரர்கள் படுகொலை..! மஜகவினர் திருவண்ணாமலையில் சாலை மறியல்..!!

திருவண்ணாமலை.மே.23., தூத்துகுடியில் 12க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்று குவித்த தமிழக காவல்துறையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக திருவண்ணாமலையில் நகர பொருளாளர் அம்ஜத்கான் தலைமையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் SL.செய்யது முஸ்தபா, மாவட்ட துனை செயலாளர் இன்தியாஸ் உசேன், நகர செயலாளர் அக்பர், நகர இளைஞர் அணி செயலாளர் தர்வேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர்.

திருவண்ணாமலை, கடம்பை, நகர நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் களந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்து கைதாக்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்