வேலூர் மஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

வேலூர்.ஏப்.28., கோடை காலத்தின் தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் 30வது கிளை சார்பில் சைதாப்பேட்டை பகுதியில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் #முஹம்மத்_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

30வது கிளை நிர்வாகிகள் #மாலிக், #அமனுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் #S_G_அப்சர்_சையத் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் மோர், வெள்ளரி, தர்பூசணி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், ஷமீல், சையத் காதர், சலீம், மண்டல நிர்வாகிகள் முஹம்மத் பாயிஸ், ஷேக் இம்ரான், அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ், ஜாபர், ரிஸ்வான், காதர், சையத் கலீம், அத்திக்குர் ரஹ்மான், இஸ்மாயில், ஜாபர், இம்ரான், மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் வருகை தந்த பொதுமக்கள் அனைவரும் மஜகவினரின் இந்த மனிதநேய பணிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறி சென்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
27.04.2018