வாணியம்பாடியில் களம் கண்ட மஜக!

image

நவ.06., கடந்த 5\11\2016 சனிக்கிழமை மாலை  வேலூர் மேற்கு மாவட்டம்  வாணியம்பாடியில் மஜக சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக   பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி,
இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா.தா.பாண்டியன்,
கர்நாடகா முஸ்லிம் முத்தாஹித் தஹ்ரிக் தலைவர் முக்தார் அஹமது, JAQH பொதுச்செயலாளர் அன்சார் ஹூசைன் பிர்தௌஸி,
ஜமாத் இஸ்லாமி ஹிந்த்  மாநில செயற்குழு உறுப்பினர்
அதீக்வுர் ரஹ்மான்,
வாணியம்பாடி நகர
தலைமை காஜி.சையத் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் பேசினார்கள்.

முழுவதும் உள்ளூர் மக்களே கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி..

மஜகவின் கள வலிமையை காட்டுவதாக அமைந்தது.

தோழர் தா.பாண்டியன் அவர்களின் பேச்சு மோடி அரசை வெளுத்து வாங்கியது.

நிறைவுரை ஆற்றிய
மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள்  பொதுசிவில் சட்டத்தை  தோலுரித்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும்
ஊர் மக்களும் பிரமுகர்களும் 
பொதுச்செயலாளரை சந்தித்து மஜகவின் பணிக்காக வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

தகவல்:
மஜக ஊடகப் பிரிவு
வேலூர் மேற்கு மாவட்டம்.