நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட கோவை MJTS கூட்டத்தில் தீர்மானம்!


நவ.25.,

கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTSன் புதிய பாதை மீட்டர் ஆட்டோ ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் உசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், ஆகியோர் கலந்து கொண்டு தொழிற்சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

மேலும் தற்போது டெல்டா மாவட்டங்களில் நிவர் புயலால் காற்றுடன் கடும் மழை இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவே தலைமை அறிவித்தால் மீட்பு பணிகளுக்கு கோவையிலிருந்து செல்ல தயாராக உள்ளதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன், அன்சர், ரியாசுதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
24.11.2020