மனிதநேய கலாச்சார பேரவையின் துபை மண்டல செயற்குழு & மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி…

நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவை -துபை மண்டலத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல் பரகாவில் அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரஜாக் தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய கலாச்சார பேரவையின் மார்க்க பிரிவாக செயல்படும் இஸ்லாமிய கலாச்சார பேரவை -IKP துபை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற  மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில்
சகோ: அப்துல் அஜிஸ் அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து சிறப்பாக உரையாற்றினார்கள்.

அதன் பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கீழ்காணும் வகையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை  அறிவிப்பு செய்து #மண்டல_செயலாளர் யூசுப்ஷா பேசினார்.

அதன் படி:
#துபை_மண்டல_பொருளாளராக
பசூர் இஸ்மாயில் பாபு அவர்களும்

#துணைச்_செயலாளர்களாக
1.கடலங்குடி ஹர்பின் அவர்களும்
2.கட்டிமேடு ஜாஹீர் அவர்களும்
3.தோப்புத்துறை ஹம்தான் அவர்களும்
4.பண்டாரவாடை அசீப் அவர்களும்
 
#இஸ்லாமிய_கலாச்சார_பேரவை(IKP)
செயலாளராக
லால்பேட்டை சபீக் அவர்களும்

பகுதி செயலாளர்களின் முதற் பட்டியல்:

1.அல் கூஸ் பகுதி செயலாளராக
காயல்பட்டினம் சபீர் அவர்களும்

2.ஹோரல் அன்ஸ் பகுதி செயலாளராக
முத்துப்பேட்டை அசார் அவர்களும்

3.மம்சார் பகுதி செயலாளராக
காட்டுமன்னர்குடி அஹமது அவர்களும்

(செயற்குழு உறுப்பினர்களில் மாற்றம் இல்லை)

செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுது.

இக்கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் நன்றி கூறினார்.எதிர்கால செயல்பாடுகள் மற்றும் புதிய சிந்தனைகள் பேசப்பட்டு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

தகவல் :-ஊடக பிரிவு.
மனிதநேய கலாச்சார பேரவை
துபை மண்டலம்.