ஜூலை 5, மே 17 இயக்கம் சார்பில் "உரிமை மீட்க விழி தமிழா" என்ற தலைப்பில் ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை தொடர் இணைய வழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி தலைமையேற்ற நிகழ்வில், காணொளி வழியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நிறைவுரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இனமான உரிமைக்காக போராடும் இயக்கமாக மே 17 இயக்கம் வளர்ந்து வருவதாக நாங்கள் கருதுகிறோம். தமிழ் தேசியத்தையும், திராவிட இயக்கத்தையும் இணைத்து பயணிப்பதாலேயே மே 17 இயக்கம் மீது நாங்கள் அதிகமாக நேசம் பாராட்டுகிறோம். இந்த தலைப்பில் காணொளி வழியாக தொடர் கருத்தரங்கை நடத்துவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வடக்கே உள்ள சிலருக்கு தமிழ்நாடு என்ற வார்த்தை கசக்கிறது. தமிழ், தமிழர் என்றாலே முகம் சுருங்குகிறது. பெரியாரின் பெயரை கேட்டால் கோபம் வருகிறது. திராவிட இயக்கம், தமிழ் தேசியம் என்ற கொள்கைகளை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை ஏற்காமல், தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க
Month:
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொரோனா நெருக்கடியால் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை விரைந்து தமிழகத்திற்கு மீட்டு வரக்கோரி இன்று சமூக இணையதள போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதனையொட்டி தோழர் தி.வேல்முருகன் தலைமையில் Zoom வழியே காணொளி கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஐனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு... வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களுக்காக இன்று சமூக இணையதள போராட்டத்தை நடத்தி வரும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், அதன் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கும் எமது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பிரச்சனையை கையிலெடுத்து முதலில் மஜக சார்பில் இணையவழிப் போராட்டங்களையும், களப் போராட்டங்களையும் ஜூன் 3 முதல் 8 வரை முன்னெடுத்தோம். இதில் அரசியல் தலைவர்கள், திரை உலகத்தினர், மனித உரிமை களத்தினர், எழுத்தாளர்கள் என பலரும் பங்கேற்றனர். களப் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றனர். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் அந்த இணைய வழி போராட்டத்தை வழி நடத்தினர். மலையாளிகளுக்கு அடுத்தப் படியாக தமிழர்கள்தான் வெளிநாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். கேரள அரசு மலையாளிகளை அழைத்து வருவதில் காட்டிய முனைப்பை தமிழக
ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வரவேற்பு!
சாத்தான்குளம் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தோம். காவல் துறையின் மாண்புகளை குலைப்பது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக பல ஜனநாயக சக்திகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். சர்ச்சைக்குரிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வலுத்ததால் தமிழகம் முழுக்க இதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது. அதன் எதிரொலியாக இன்று தமிழகம் முழுக்க ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருக்கிறது. இதை வரவேற்கிறோம். இதை நிரந்தர தடையாக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மனித உரிமைகளை பாதுகாத்து சட்டத்தின் வழியில் அனைவரும் கடமையாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். இதற்கு ஏற்பளிக்கும் வகையில் தமிழக காவல் துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 05.07.2020
கோவையில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!!
ஜூலை:04., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பெரிய கடைவீதி, போத்தீஸ் கார்னர், ஜமேசா தர்கா, ஆகிய பகுதிகளில் வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, அவர்கள் தலைமையில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ஹாரூன், ஜமேஷா, சிராஜுதீன், அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்களை, வழங்கினர். இதில் வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், என சுமார் 500க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம். 04.07.2020
மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு! சமூக நீதி பேண ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதன்முதலில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2018-19 ஆம் ஆண்டில் 4 மாணவர்களுக்கும், 2019-20 ஆம் ஆண்டில் 5 மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையை மாற்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை தீர்மானித்து, அதற்கான அவசர சட்டத்தை கடந்த ஜூன் 15-ஆம் தேதி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஆளுநர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படாமல் தாமதிக்கப்படுகிறது.. இது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. அதேநேரத்தில், மிக முக்கியமான அவசர சட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்பும் போது, சட்ட ஆலோசனை என்ற பெயரில், ஆளுநர் தாமதம் செய்வது நியாயமல்ல. தமிழக அரசு இது குறித்து