ஜூலை.17, தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம் கண்டியூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 250 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி அருந்தி பயனடைந்தனர். இதில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) S.ஹபீப் ரஹ்மான், கிளை செயலாளர் ரோஜ் (எ) முபாரக் அலி, பொருளாளர் முகம்மது யூசப், துணைச் செயலாளர்கள் சையத் இஸ்மத் பாட்ஷா, தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவையாறு_ஒன்றியம் #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
Month:
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..! தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு..!
ஜூலை.17., தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும், கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், மவுண்ட் கோபால், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி கூட்டமைப்பு சார்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் பீர்மைதீன், அவர்கள் குறிப்பிட்ட நபர்களின் முகநூல் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கூட்டமைப்பை சேர்ந்த கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 17-07-2020
சத்தியமங்கலத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!!
ஈரோடு:ஜுலை 17., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மஜக ஈரோடு மேற்கு மாவட்டம் சத்திய மங்கலத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் B.செரீப், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் நகராட்சி ஆய்வாளர் வேல் முருகன், அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கபசுரக் குடிநீர் சேவை பொது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் இறுதியில் சத்தியமங்கலம் நகர செயலாளர் R. சலிம், நன்றியுரையாற்றினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 17.07.2020
கலவரங்களை தூண்டுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
சமீப நாட்களாக தமிழகத்தில் அமைதியை குலைத்து வன்முறைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருவது கவலையளிக்கிறது. உலகில் 200 கோடி மக்கள் மிகவும் மதிக்கும் இறைத்தூதர் எனப் போற்றப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்து வர்மா என்பவர் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அது போல் இந்து சமுதாய மக்கள் கொண்டாடும் முருகன் கடவுளையும், கந்தசஷ்டி கவசத்தையும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டிருப்பதும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனிடையே நேற்று கோவையில் தமிழர்கள் மிகவும் மதிக்கும் தந்தை பெரியாரின் சிலையை சிலர் காவிச் சாயம் பூசி அவமதித்திருப்பதும் கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. ஒரு தரப்பின் நம்பிக்கைகளை, மதீப்பீடுகளை அவமதிப்பது பெரும் குற்றமாகும். இதனால் பரஸ்பர உறவுகளும், பொது அமைதியும் கெடுகிறது. எனவே இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இது போன்ற குற்றங்களுக்கு ஆதரவாக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் மீதும் பாரபட்சமின்றி தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் உறுதி காட்ட வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 17.07.2020
கூட்டமைப்பு சார்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு..!
ஜூலை.17., தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும், கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், மவுண்ட் கோபால், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி கூட்டமைப்பு சார்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் IPS அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக செங்கை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகீர் உசேன், தில்சாத் ஆகியோர் குறிப்பிட்ட நபர்களின் முகநூல் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் கூட்டமைப்பை சேர்ந்த கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம் 16-07-2020