இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த பாபர் மஸ்ஜித் வழக்கில், உச்ச நீதி மன்றம் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இத் தீர்ப்பு என்பது சட்டம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இப்போது நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பின் வாசகங்கள் அமைத்திருக்கிறது. தீர்ப்பின் பல இடங்களில் சமரசம் மற்றும் இணக்கம் கருதி நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ஆனால்,அந்த இடம் சம்மந்தமான தீர்ப்பு இப்போது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுக்கொன்று முரண்கள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த மசூதியில் உள்ளே முஸ்லிம்களும், வெளியே இந்துகளும் வழிபாடு நடத்தியதாக கூறும் உச்சநீதி மன்றம் ; தொழுகையை நடத்துவதற்கான உரிமையை முஸ்லிம்களை முழுமையாக இழக்கவில்லை என்றும் கூறியுள்ளது. அப்படி கூறிவிட்டு, அது சர்சைக்குரிய இடம் என்றும் சொல்லிவிட்டு, அதை ஒரு தரப்புக்கு மட்டும் சொந்தம் என கூறியிருப்பது விநோதமாக இருப்பதாகவும் சட்ட வல்லுனர்கள் கருத்து கூறி உள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் வாதாடிய சன்னி வக்பு வாரியம், இத்தீர்ப்பில் அதிருப்தி இருப்பதாக கூறியிருக்கிறது. நாங்கள், தேசிய அளவிலான
Month:
அயோத்தி தீர்ப்பு! , நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்!
#மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA., அறிக்கை! பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் ? என்ற வழக்கின் தீர்ப்பை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தீர்ப்பு என்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைய கூடாது. மாறாக ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என நீதியை விரும்பும் அனைவரும் எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்காக நீண்ட நெடிய அறப்போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். இது பற்றி விவாதங்கள் அதிகமாகி எதிர்பார்ப்புகள் பெருகியுள்ளது. வரலாறு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் அறியும் என நம்புகிறோம். எனினும், இன்றைய அரசியல் சூழல் மோசமானது என்றும், நீதிமன்றங்கள் மறைமுக நெருக்கடிகளை சந்திக்கின்றன என்றும் எழுப்பப்படும் விவாதங்கள் ஒருபுறம் கவலையளிக்கிறது. இருப்பினும் எல்லாவற்றையும் விட நாட்டு மக்களின் ஒற்றுமையும், பொது அமைதியும் முக்கியமானது. கடந்த காலங்களில் இப்பிரச்சனைகளால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பறி போயிருக்கின்றன. கலவரங்களில் பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இனி இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும். தீர்ப்புக்கு பின் அது குறித்த வெற்றி ஆரவாரங்கள் அல்லது கண்டன போராட்டங்கள் ஆகியன நாட்டின் அமைதியை குலைத்து விடும் என்பதால், சகல தரப்பும்