ஏப்ரல்.29., இன்று மஜக தலைமையகத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒமன் மண்டல பொறுப்பாளருமான உவைஸ் அவர்கள் சந்தித்து உரையாடினார் . ஓமான் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவை - MKP- யின் நிர்வாக வளர்ச்சி குறித்து தலைவரிடம் கருத்துகளை எடுத்துரைத்தார் . தாயக கட்சிப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் . அப்போது மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 29.04.2024.
தமிழகம்
தமிழகம்
நாகையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…
ஏப்ரல் 24., நாகை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் , மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 27.04.2024.
நன்றி பாராட்டும் சந்திப்பு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் அப்துல் மஜீது MLAசந்திப்பு….
ஏப்ரல்.23., மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கேரள மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு UDF வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். மலப்புரம், பொன்னானி நாடாளுமன்ற தொகுதிகளில் UDF கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். இன்று அவரை கேரள மாநில முஸ்லிம் லீக் முன்னணி தலைவர்களில் ஒருவரும், சட்டமன்ற உறுப்பினருமான K.P.A. அப்துல் மஜீது அவர்கள், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து உரையாடினார். இவர் இக்கட்சியின் கொறடாவாகவும், நீண்ட கால பொதுச் செயலாளர் ஆகவும் பணியாற்றி தற்போது 21 வருடமாக MLA-வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் மஜக-வின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தங்கள் கட்சியினருக்கு பரப்புரை செய்தமைக்கு நன்றிகளையும் கூறினார். அப்போது மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி இப்ராகிம், மாநிலத் துணைச் செயலாளர்கள் ஜாவித் ஜாபர், பேரா. அப்துல் சலாம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கேரளா - #தென்னிந்தியா 22.04.2024.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து Road Show மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு அவரை வரவேற்று ஒலித்த ஜிந்தாபாத் குரல்கள்…..
ஏப்ரல்.23., கேரளாவில் காங்கிரஸ் - IUML அங்கம் வசிக்கும் UDF கூட்டணியை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு வடிவங்களில் தொடர் பரப்புரை செய்து வருகிறார். மலப்புரம், பொன்னானி தொகுதி பரப்புரைகளை தொடர்ந்து கோழிக்கோடு தொகுதியிலும் பகல் நேர நிகழ்ச்சி அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கடும் வெயில் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. பிறகு திட்டமிட்டப்படி ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அரிகோட்டில் நடந்த Road Show வில் அவர் பங்கேற்றார். அவரது வருகையை முன்னிட்டு முதல் நாள் திட்டமிடப்பட்டு இந்த நிகழ்ச்சி UDF நிர்வாகிகளால் நடத்தப்பட்டது. காலை முதலே 'தமிழ்நாட்டிலிருந்து இதில் பங்கேற்க மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வருகை தருகிறார் ' என நகரெங்கும் பரப்புரை வாகனங்களில் அறிவிக்கப்பட்டவாறு இருந்தது.. மாலை அங்கு அவர் வந்த போது இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் 7.30 மணி அளவில் பெருந்திரளான மக்களுடன், எழுச்சி முழக்கங்களுக்கிடையே தொடங்கிய பேரணியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அப்போது மலையாளிகள், 'தமிமுன் அன்சாரி ஜிந்தாபாத்; UDF ஜிந்தாபாத் ; india ஜிந்தாபாத்; என ஆராவாரம் பொங்க முழங்கினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக
மலபுரத்தில் மஜக பரப்புரை இது கோட்சே தேசமல்ல காந்தி தேசம் தமிழ்நாடு கேரள மக்களின் மனநிலையை இந்தியாவின் மன நிலையாக மாற்ற வேண்டும் மலப்புரத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..
ஏப்ரல்.22., கேரளாவில் காங்கிரஸ் - IUML அங்கம் வகிக்கும் UDF கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொன்னானி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு தொகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இங்கு மலப்புரம் தொகுதியில் நடைபெற்ற Family Meet up என்ற குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகளின் தலைவர்களுடன் பங்கேற்றார். இங்கு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஈ.டி.முஹம்மத் பஷீர் அவர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பேசியதாவது... இந்தியாவில் 44 கோடி பேர் இரவு உணவு உண்ணாமல் உறங்கும் நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டு கால மோடியின் பாஜக ஆட்சியில் உலக அளவில் பட்டினி தர வரிசையில் இந்தியா சில ஆப்பிரிக்க நாடுகளை விட பின் தங்கி 111-வது வரிசையில் உள்ளது. நாட்டில் 5 கோடி பேர்தான் வறுமையில் உள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். அப்படியெனில் 20 கோடி மக்களுக்கு ரேஷனில் இலவச அரிசி வழங்குவது ஏன்? ஏழைகள் நிறைந்த நாட்டின் பிரதமர், தன்னை ஏழைத்தாயின் மகன் என்பவர் 10 லட்சம் ரூபாயில் கோட் சூட் அணிகிறார். 1 லட்சத்து 42