ஏப்ரல்.05., ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 'அல்குத்ஸ் தினம்' என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என கடை பிடிக்கிறது. இதனையொட்டி 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் ' என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். இன்று அந்த பதாகையை ஏந்தி அவர் வலைதள பரப்புரையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மஜக-வின் முன்னணி தலைவர்கள், அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் ' தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 05.04.2024.
தமிழகம்
தமிழகம்
ஏப்ரல் – 5 பாலஸ்தீன ஆதரவு நாள்.
தென்காசி பரப்புரை…. மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற அலை வீசுகிறது… சுங்க கட்டணம் ரத்து என்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி வரவேற்புக்குள்ளாகியுள்ளது! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…
ஏப்ரல்.4., இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ஸ்ரீ ராணி குமார் அவர்களை ஆதரித்து இன்று தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது... ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 23 இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. இவர்கள் அதானி, அம்பானிகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள். ஏழை- எளியவர்களுக்கு எதிரான ஆட்சியை நடத்துகிறார்கள். சுங்கச் சாவடி கட்டணங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் தென்காசியிலிருந்து காரில் சென்னைக்கு சென்றால் Toll Gate கட்டணம் 1200 ரூபாய் ஆகிறது. இங்கிருந்து சரக்குகளை லாரியில் அனுப்பினால் அதற்கு இதை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. விலைவாசி உயர்வுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது. இதை ரத்து செய்வோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இது பெரும் வரவேற்புக்குள்ளாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என திமுக வாக்குறுதி அளித்துள்ளது. இப்போது இந்தியா கூட்டணி ஏறுமுகத்தில் உள்ளது. ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வலுத்து மோடி எதிர்ப்பலை உருவாகி விட்டது. பிரபல அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் பாஜக கூட்டணி 200 இடங்களை தாண்டாது என கூறியுள்ளார் தமிழ்நாட்டில்
நெல்லையில்… தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி பரப்புரை! மஜக வினர் பங்கேற்பு…
ஏப்ரல்.04., இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா தலைவர் மு. தமிமுன் அன்சாரி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை அணிவித்தார் இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பொறுப்பாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்தியா கூட்டணியின் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகளும் மஜக தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர் தகவல்; #தேர்தல்_பணிக்குழு #திருநெல்வேலி_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING #மனிதநேய_ஜனநாயக_கட்சி 04.04.2024
சேலத்தில் எழுச்சி…. மஜகவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்! தேர்தல் களத்திலும் பலம் பெறும் மஜக…
ஏப்ரல் 04, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சாரை சாரையாக மஜக-வில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கோவை, நாகை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சேலத்திலும் இணைப்பு நிகழ்வுகள் தொடங்கியுள்ளது. மஜக மாநில துணைச் செயலாளர் A.J.S.தாஜுதீன் அவர்கள் முன்னிலையில், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் I.குலாப் ஜான் அவர்கள் தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு.சுந்தரம் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இவர்களுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட பொருளாளர் A.K.சதாம் உசேன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சேலம்_மாவட்டம் 04-04-2024.