சேலத்தில் எழுச்சி…. மஜகவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்! தேர்தல் களத்திலும் பலம் பெறும் மஜக…

ஏப்ரல் 04,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சாரை சாரையாக மஜக-வில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர்.

கடந்த 6 மாதங்களில் கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கோவை, நாகை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சேலத்திலும் இணைப்பு நிகழ்வுகள் தொடங்கியுள்ளது.

மஜக மாநில துணைச் செயலாளர் A.J.S.தாஜுதீன் அவர்கள் முன்னிலையில், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் I.குலாப் ஜான் அவர்கள் தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு.சுந்தரம் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

இவர்களுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட பொருளாளர் A.K.சதாம் உசேன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சேலம்_மாவட்டம்
04-04-2024.