ஜூலை.08, திருச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்வார்தோப்பு பகுதியில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அபு தலைமையில் கபசுர குடிநீர் விநியோகிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மஜக திருச்சி மாவட்ட செயலாளர் பாபுபாய் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும், திருச்சி மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். முககவசங்கள் குறித்த அக்கறையின்றி வரும் பொதுமக்களிடம் மாஸ்க் வழங்கி, சமூக விலகலை பின்பற்றுதல் மற்றும் சுய தனிமைப்படுத்தி கொள்ளுதல் மூலமாக தான் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என எடுத்து கூறி விழிப்புணர்வு செய்கின்றனர். தொடர்ந்து மேற்கூறிய நிகழ்விலும் சமூக விலகல் மற்றும் முக கவசத்தின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சேக்தாவுத், மாவட்ட துணைச் செயலாளர்கள் பகுருதீன், காதர், ஜமாலுதீன், தர்ஹா பாரூக், மாவட்ட இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்பாஸ், MJVS மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்தீக் மற்றும் ஆழ்வார்தோப்பு கிளை நிர்வாகிகள் இஸ்மாயில், உசேன், நாசர் மற்றும் ஜாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
இஸ்லாமிய கலாச்சார பேரவை
திண்டுக்கல் கீரனூரில் உதயமானது மஜக!
ஜூலை.08, திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூரை சார்ந்தவர்கள் மஜக வின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். மஜக கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் C.A. சாந்து முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திண்டுக்கல்_மாவட்டம். 07/07/2020
குடியாத்தம் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்
வேலூர்.ஜூலை.07., உலகெங்கிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் சூல்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியாத்தம் நகரின் பல்வேறு பகுதிகளில் நகரச் செயலாளர் S.அனீஸ் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் பலருக்கும் வழங்கப்பட்டது. இப்பணிகளோடு, கொரோனா நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நகரம் முழுவதும் மஜக-வினர், பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலையும், முககவசம் அணிவது, இல்லங்களில் சுய தனிமைப்படுத்துதல் போன்றவை மட்டுமே கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்கும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.. இந்நிகழ்வில் மாவட்டப்பொருளாளர் I.முனவ்வர் ஷரிப் மற்றும் நகர துணைச் செயலாளர் சலிம், இளைஞர் அணி செயலாளர் முஹம்மது கவுஸ், சாதிக், பிலால்,பயாஸ், பக்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 07-07-2020
ஹஜ் இல்லம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும்! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA
ஜூலை.07, இன்று தமிழ்நாடு ஹஜ் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. இக்குழுவுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்வு நடைபெறும். அதன்படி மீண்டும் ஜனாப். A.அப்துல் ஜப்பார் அவர்கள் இதற்கு தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதில் zoom காணொளி வழியே மஜக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் குழு உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார். அப்போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு விமான நிலையம் அருகாமை பகுதியில் ஹஜ் இல்லம் கட்ட சட்டசபையில் தான் பேசியதையும், பிறகு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை சந்தித்து இதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதையும், அவ்வாறே முதல்வர் அவர்கள் நிதி ஒதுக்கியுள்ளதையும் நன்றியுடன் நினைவு கூறுவதாகக் குறிப்பிட்டார். எனவே இதற்கு இடம் தேர்வு செய்து, காலம் தாழ்த்தாமல் புதிய ஹஜ் கட்டிடம் கட்ட, அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் தலைமையில் நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் மீண்டும் தமிழக ஹஜ் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்காக அப்துல் ஜப்பார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் முகம்மது ஜான் MP, அபுபக்கர் MLA,(zoom) ஜவஹர் அலி, லியாக்கத் அலி கான்
மஜக மதுரை மாவட்டம் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்..!
ஜூலை.07., கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, போர்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் இரண்டாம் கட்டமாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, காலை 7மணி முதல் மாவட்டச்செயலாளர் இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் புதூர் கனி ஆகியோர் தலைமையில் மாவட்டப் பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் சுலைமான், கோடை அப்துல் மஜீத், சதாம் உசேன், தொழிளாளர் அணி செயலாளர் பஷீர்கான், 28-வது வட்டச்செயளாலர் சுல்தான் பாட்ஷா ஆகியோர் பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்கள் கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம் 07-07-2020