சிவகங்கை.நவ.19.., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் அவர்களை இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்தில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் மற்றும் பரமக்குடி நகர நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பரமக்குடி நகர் முழுவதும் வார்டு கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது. நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்தும். விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ், பரமக்குடி நகரச் செயலாளர் எமனை சாகுல், நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி கான், நகர மாணவர் இந்தியா செயலாளர் கனிபா, எமனேஸ்வரம் இளைஞரணிச் செயலாளர் இஷாம் மற்றும் பசீர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #இராமநாதபுரம் 18-11-2019
அறிக்கைகள்
விருதுநகர் மாவட்டசெயற்குழு கூட்டம்..!! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
விருதுநகர்.நவ.18.., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.11.2019 அன்று சிவகாசியில் விஸ்வகர்மா திருமண மஹாலில் சிவகாசி நகரச் செயலாளர் இக்பால் மைதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.,M.Com., தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது, இறுதியாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தகவல்; #தகவல்தொழில்நுட்பஅணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 18.11.2019
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் இலவச கண் சிகிச்சை முகாம்..! மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன்ரசீது துவக்கிவைத்தார்..!!
தென்காசி., நவ.17 தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள அச்சன்புதூர் புனித ஜான்ஸ் நர்சரி, பிரைமரி பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்கள். இம்முகாமிற்கு தென்காசி மாவட்ட பொறுப்பாளர் பீர் மைதீன் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் கமால்தீன், துணைச் செயலாளர்கள் முகம்மது ரியாஸ், ஷேக் முகம்மது, செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் அன்வர் சாதிக், துணைச் செயலாளர் முகம்மது ஷாபீக், இளைஞரணிச் செயலாளர் முகம்மது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலாளர் முகம்மது நாசர் அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் நாகர்கோவில் பெஜான்சிங் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவச கண்சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். அச்சன்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதில் 40 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 30 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் ஏ.ஆர்.சாகுல் ஹமீது, சேகரத் தலைவர்
பாத்திமாலத்தீப் தற்கொலை விவகாரம்..!, பிரச்சனையை தமிழக சிறுபான்மை ஆணையத்திடம் கொண்டு சென்றது மஜக!
சென்னை.நவ.16.., சென்னை IIT யில் பயின்ற மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்த நிகழ்வு நாட்டையே உலுக்கியுள்ளது. தற்போது இது கொலையாக இருக்குமோ என்ற ஐயமும் வலுப்பெற்றிருக்கிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, இப்பிரச்சனையை தமிழக சிறுபான்மையினர் ஆணையத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன் முதன்மை செயலாளர் திரு.சுரேஷ்குமார் IAS அவர்களிடம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் பொருளாளர் ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் இது தொடர்பாக மனு அளித்தனர். அப்போது சிறுபான்மை ஆணைய மாநில துணைத் தலைவர் ஜவஹர் அலி உடனிருந்தார். இதை விசாரிக்கும் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட அனைவரையும் நேரில் அழைத்து விசாரிக்கும் வலிமை இந்த ஆணையத்திற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா லத்தீபுக்கு நீதி தேடும் அறப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய அம்சமாகும். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 15-11-2019
ஆதரவற்ற ஜனாசாவை பெற்று நல்லடக்கம் செய்த மஜகவினர்
சென்னை.நவ.14.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில துணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற பெண்ணின் சடலம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையின் அனுமதியோடு ஜனாஸாவை சென்னை ராயப்பேட்டை கப்ர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடன் சென்ட்ரல் பாவா மற்றும் இளையான்குடி மைதீன் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #சென்னை 14-11-2019