பிப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு கடந்த பிப்ரவரி 23, வெள்ளி அன்று குவைத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி Ex MLA, பேராசிரியர் சுந்தரவள்ளி, ஜீவா டுடே நெறியாளர் தோழர். ஜீவ சகாப்தன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த மாநாட்டின் அரங்க நுழைவாயிலுக்கு மறைந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர், சங்கரய்யா அவர்களின் பெயரை சூட்டியிருந்தனர். குவைத் வாழ் தமிழர்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றதோடு, மாநாட்டு அமைப்பாளர்களை இதற்காக பலரும் பாராட்டினர் தகவல்; #mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #குவைத்_மண்டலம் 23.02.2024.
செய்திகள்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, S.ஜமால்தீன் த/பெ; I.சம்சுதீன் 41கலைவாணர் தெரு, அரியமங்கலம், திருச்சி.10 அலைபேசி; 7092957211 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 25.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநிலத் துணைச் செயலாளராக, U. முஹம்மது இஹ்ஸானுல்லாஹ் 72, காந்திஜி வீதி, அண்ணா நகர், பி. பெ அக்ரஹாரம், ஈரோடு - 5 அலைபேசி; 88389 28192 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.02.2024.
மஜக 9 ஆம் ஆண்டு தொடக்கம்… தொடங்கியது விருந்தோம்பல் மற்றும் நலத்திட்ட உதவிகள்
பிப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று துவங்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழகமெங்கும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும், விருந்தோம்பல் நிகழ்ச்சிகளும் நடைபெற துவங்கி உள்ளது. அதன் ஒரு நிகழ்வாக இன்று வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் இளைஞர் அணி சார்பாக மாணவர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் M.அமீர் உசேன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர் SM.நாசர், இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மாவட்டச் செயலாளர் L ஜாஃபர் சாதிக், மாவட்ட பொருளாளர் N.நிஜாம் பாய் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் MJTS மாவட்ட செயலாளர் S.வெங்கடேசன், MJTS மாவட்ட பொருளாளர் M.ஜீலானி அகமத், MJTS துணைச்செயலாளர் N.இளங்கோ, மாவட்ட இளைஞர் அணியின் துணை செயலாளர் J.முகமது பைசல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் J.ரியாஸ் கான், மருத்துவ அணி பொருளாளர் N.அசார் உசேன் மற்றும் P.ஜீவா, R.நகுல் M.நகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வடசென்னை_கிழக்கு_மாவட்டம் 24.02.2024.
குவைத்தில்… பெரியார் கைப்பிடியை தூக்கி முழக்கம் தமிழர் எழுச்சி மாநாட்டில் உற்சாகம்
பிப்ரவரி.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பேராசிரியர். சுந்தரவள்ளி, ஜீவா டுடே நிறுவனர் தோழர் ஜீவ சகாப்தன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இதில் குவைத்தில் செயல்படும் தந்தை பெரியார் நூலகத்தின் காப்பாளர் தோழர். சித்தார்த்தன் அவர்கள் மூவருக்கும் நூல்களை பரிசாக வழங்கினார். அப்போது கைத்தடி ஏந்தி அவர் மேடைக்கு வந்து, இது பெரியார் வைத்திருந்த கைத்தடியை நினைவூட்டுவதற்காக எடுத்து வந்ததாக கூறினார். அப்போது மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், அதை தூக்கிப்பிடித்து மக்களிடம் காட்ட, அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. அயலக தமிழர்களிடம் தந்தை பெரியாரின் தாக்கம் எவ்வளவு வலிமையாக ஊடுறுவி உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக இச்சம்பவம் அமைந்தது. தகவல்: #mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #குவைத்_மண்டலம் 23.02.2024.