குவைத்தில்… தோழர் சங்கரய்யாவை சிறப்படுத்திய தமிழர்கள்! MKP மாநாட்டில் தமிழர்களை ஈர்த்த நுழைவாயில்…

பிப்.25.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு கடந்த பிப்ரவரி 23, வெள்ளி அன்று குவைத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி Ex MLA, பேராசிரியர் சுந்தரவள்ளி, ஜீவா டுடே நெறியாளர் தோழர். ஜீவ சகாப்தன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இந்த மாநாட்டின் அரங்க நுழைவாயிலுக்கு மறைந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர், சங்கரய்யா அவர்களின் பெயரை சூட்டியிருந்தனர்.

குவைத் வாழ் தமிழர்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றதோடு, மாநாட்டு அமைப்பாளர்களை இதற்காக பலரும் பாராட்டினர்

தகவல்;
#mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#குவைத்_மண்டலம்
23.02.2024.