பிப்ரவரி.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பேராசிரியர். சுந்தரவள்ளி, ஜீவா டுடே நிறுவனர் தோழர் ஜீவ சகாப்தன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இதில் குவைத்தில் செயல்படும் தந்தை பெரியார் நூலகத்தின் காப்பாளர் தோழர். சித்தார்த்தன் அவர்கள் மூவருக்கும் நூல்களை பரிசாக வழங்கினார். அப்போது கைத்தடி ஏந்தி அவர் மேடைக்கு வந்து, இது பெரியார் வைத்திருந்த கைத்தடியை நினைவூட்டுவதற்காக எடுத்து வந்ததாக கூறினார். அப்போது மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், அதை தூக்கிப்பிடித்து மக்களிடம் காட்ட, அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. அயலக தமிழர்களிடம் தந்தை பெரியாரின் தாக்கம் எவ்வளவு வலிமையாக ஊடுறுவி உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக இச்சம்பவம் அமைந்தது. தகவல்: #mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #குவைத்_மண்டலம் 23.02.2024.
Author: admin
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட அவைத் தலைவராக, நிலா இக்பால் அலைபேசி; 9092929262 மாவட்ட பொருளாளராக, முகம்மது அலி த/பெ; முகைதீன் இப்ராகிம் 21 சாதுலி நகர், பேட்டை, திருநெல்வேலி-627010 அலைபேசி; 9787000886 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.02.2024.
குவைத்தில் எழுச்சி… நிரம்பி வழிந்த தமிழர் எழுச்சி மாநாடு… திருக்குறளை ஆங்கில அரபியில் ஒப்புவித்த மாணவ மாணவிகள்.. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்பு….
பிப்ரவரி.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) குவைத்தில் சிறப்பான சேவைகளை ஆற்றி வருகிறது. மாநாடுகள், கருத்தரங்குகள், இரத்ததான - மருத்துவ சேவை முகாம்கள், வேலைவாய்ப்பு உதவிகள் என MKP-யின் செயல்பாடுகள் குவைத் வாழ் தமிழக மக்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக குவைத் தமிழர் எழுச்சி மாநாடு பெரும் வெற்றியாக அமைந்தது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மாநாட்டு பேருரையாற்றினார். பேராசிரியர் சுந்தரவள்ளி, ஜீவா டுடே யூ டியூப் நிறுவனர் ஜீவ சகாப்தன் ஆகியோரும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டில் பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர். நாற்காலிகள் போதததால் கூடுதல் நாற்காலிகள் வரவழைக்கப்பட்டது. அதையும் மீறி இரவு 8 மணியளவில் மேலும் கூட்டம் திரண்டதால் மாநாட்டு அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் திரண்டது. மாநாட்டின் நுழைவாயிலுக்கு சமீபத்தில் மறைந்த இடதுசாரி தலைவரும், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர். சங்கரய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாநாட்டு அரங்கின் நுழைவாயிலுக்கு 'பாலஸ்தீன தியாகிகள் அரங்கம்' என்று இஸ்ரேலிய பயங்கரவாத போரால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து பெயரிடப்பட்டது. மாநாட்டு மேடைக்கு சமீபத்தில் மறைந்த குவைத் மன்னர் சேக் நவாப் அல் அஹமத் அல் ஜாபர் அல்
அன்பும், அறிவும் நிறைந்த தலைவர் 69 சதவீத இட ஒதுக்கீடை உறுதி செய்த சமூகநீதி காத்த வீராங்கணை மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியலை அங்கீகரித்த ஆளுமை அவரது அரசியல் சேவைகளை போற்றுகிறோம். ThamimunansariM
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…..
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக, மு. முகமது சஃப்ருதீன் த/பெ; B முகமது மீரான் பெரிகடை வீதி, காங்கயம் கிராஸ் ரோடு திருப்பூர்- அலைபேசி; 73589 57311 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.02.2024.