தோழர் பெ.மணியரசனை சந்தித்து மஜக பொதுச்செயலாளர் நலம் விசாரிப்பு..!

தஞ்சை.ஜூன்.13., இன்று இரவு 8.45 மணியளவில் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவமனையில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட #காவிரி_உரிமை_மீட்பு_குழு தலைவர் தோழர் #பெ_மணியரசன் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அவர் தாக்கப்பட்ட விதமும், அவரது கைப்பை பறிக்கப்பட்ட செய்தியை பெரிது படுத்தி அதன்முலம் தாக்கப்பட்ட செய்தியின் பின்னணியை திசை திருப்பும் முயற்சியும் பல்வேறு சந்தேகங்களை உருவாக்குவதாகவும், இதன் பின்னணியில் #அதிகார_வர்க்கத்தின் சதி இருக்குமே என்ற ஐயமும் எழுவதாக அங்கிருந்த தோழர்கள் குற்றம்சாட்டினார்.

இத்தாக்குத்தால் முயற்ச்சிக்கு பிறகு, தானும் காவிரி உரிமை மீட்பு குழு தோழர்களும் புது தெம்பை பெற்றிருப்பதாக தோழர் மணியரசன் கூறினார்.

முன்னதாக திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தோழர் மணியரசனை தாக்கிய கும்பலை விரைவாக கைது செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிகழ்வின் போது மஜக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் வல்லம் கபீர், பொருளாளர் ஜப்பார், துணை செயலாளர் மைதீன், நகர செயலாளர் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_மாநகர்_மாவட்டம்