பிரதீபா குடும்பத்திற்கு ₹7 இலட்சம் நிவாரண உதவி..! தமிழக முதல்வருக்கு தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA நேரில் நன்றி..!

சென்னை.ஜூன்.06., ‘நீட்’ தேர்வு எழுதி, அதில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்யதுக் கொண்ட, மாணவி பிரதீபா குடும்பத்திற்கு, தங்கள் கோரிக்கையை ஏற்று ₹7 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவியை இன்று சட்டமன்றத்தில் #முதல்வர் அறிவித்தார்.

அதற்க்காக முதல்வர் எடப்பாடியாரை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு_MLA ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்கும் கோரிக்கையையும் பரிசீலிக்குமாறு இருவரும் கேட்டுக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
06.06.2018