சிறையில் மஜக பொருளாளரை சந்தித்த தனியரசு MLA மற்றும் மஜக தலைமை நிர்வாகிகள்..!

சென்னை.ஏப்.18., காவிரி போராட்டத்தில் சிறை சென்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று மஜக தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தனியரசு MLA, மஜக மாநில செயலாளர்கள் சாதிக்பாட்ஷா, சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் ஷமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக், மாணவர் இந்தியா மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது, கொள்கை விளக்க பேச்சாளர் J.S.மீரான் ஆகியோர் சந்தித்தனர்.

இவர்களுடன் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M.நாசர், கோவை மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் ஆகியோரும் சந்தித்தனர்.

மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவூஃப் ரஹீம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, பூவை நகர செயலாளர் யாசர் அராஃபத் ஆகியோரும் உடனிருந்தனர்.

மாணவர் இந்தியாவின் தென்சென்னை மாவட்ட செயலாளர் கபீர் அஹமது(PRO), கோவை மாவட்ட செயலாளர் மன்சூர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஸரப் ஆகியோரும் மஜக நிர்வாகிகளை சந்தித்தனர்.

சிறையில் நாங்கள் உற்சாகமாக இருப்பதாகவும், சமூகப்பணிகளில் இன்னும் வீரியத்துடன் செயல்பட வேண்டுமென தங்களை சந்திக்க வந்த மஜக நிர்வாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து உத்வேகப்படுத்தினர்.

மேலும் தங்கள் அனைவரது விடுதலைக்காக பிரார்த்திக்குமாறும் கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை.
18.04.18